மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலஜஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை நேற்று(7) கைது செய்ததுடன், 8 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கும் உபகரணங்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒண்றினையடுத்து பொலிஸார் சம்பவதினமான நேற்று இரவு கண்ணகிபுரம் மற்றும் யூனியன்கொலணி ஆகிய பிரதேசத்திலுள்ள 3 வீடுகளை முற்றுகையிட்டனர்.
இதன் போது கண்ணகிபுரத்தில் ஒரு பெண்ணை 2 போத்தல் கசிப்புடனும் யூனியன் கொலணியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை 6 போத்தல் கசிப்புடனும், அதே பகுதியில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்களைக் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 8 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கும் உபகரணங்களை மீட்டுள்ளதாகவும், இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.